2வது முறையாக கோல்டன் குளோப் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரை

       ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், 2வது முறையாக கோல்டன் குளோப் விருதைப் பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குநர் டேனி பாயில் இயக்கிய 127 ஹவர்ஸ் படத்திற்காக, கோல்டன் குளோப் விருதுக்கு ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

         ரஹ்மானுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் ஒரிஜினல் இசைக்கான போட்டிப் பிரிவில் உள்ளனர்.



            ஜேம்ஸ் பிரான்கோ ஹீரோவாக நடித்துள்ள 127 ஹவர்ஸ் படத்திற்கு நல்ல வரவேற்பும், விமர்சனங்களும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஹ்மானின் இசையும் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. எனவே ரஹ்மான் மீண்டும் கோல்டன்குளோப் விருதைப் பெறுவார் என்று நம்பப்படுகிறது.
                         மேலும் அப்படத்தில் நடித்த ஜேம்ஸ் பிரான்கோவிற்கு சிறந்த நடிகர் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல், என மொத்தம் 4 விருதுகள் '127 ஹவர்ஸ்' படத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே கூட்டணி ஸ்லம்டாக் மில்லியினர் படத்திற்காக கோல்டன் கோளப் மற்றும் ஆஸ்கார் விருதுகள் தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்துமஸ் வால் பேப்பர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் கேஜட்டுகள்

                                நண்பர்களே இந்த வலை பக்கத்தில் நீங்கள் பெரிய அளவிலான கிறிஸ்துமஸ் வால் பேப்பர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் கேஜட்டுகளை டவுன்லோட் செய்யலாம்.



                                 கிறிஸ்துமஸ் வால் பேப்பர்களை டவுன்லோட் செய்ய உங்களுக்கு பிடித்த வால் பேப்பர் மீது ரைட் கிளிக் செய்து சேவ் இமேஜ் அஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket


Photobucket

Photobucket

Photobucket

Photobucket

என்னே ! என் இந்திய தேசியக்கொடிக்கு தமிழக ஆட்சியில் வந்த சோதனை

         நமது தமிழக அரசு இதுவரை எதை கிழித்தது  என்று யாரும் கேட்க முடியாத அளவில் ஒரு சாதனை நடந்துள்ளது . நேற்று தமிழக சட்டமன்றத்தில் மேல் நாட்ட பட்டிருந்த இந்திய தேசியக்கொடி திடீரென கிழிந்து போனது . இதற்கு காரணம் பலமாக வீசிய காற்றே என்று கூறியுள்ளனர் .


                110 கோடி மக்கள் வாழும் இந்தியாவின்  கொடி இவ்வளவு பலவீனமாக இருகிறதே என்று நினைக்கையில் வருத்தமாகத்தான் உள்ளது. 

இலவசமென்று கூறி தமிழனை இழிச்சவாயனாக்கும் கூட்டம்

         இன்று திடீரென நான் எனக்கு வந்திருந்த தமிழ் மின்னஞ்சல்களை பார்த்துகொண்டிருந்தேன் . அவற்றில் இந்த ஓன்று மிகவும் அருமையாக இருந்தது, அதை இங்கே பகிர்ந்துள்ளேன் . உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள் .



இந்திய மாணவர்களுக்கு Facebook 38 லட்சம் சம்பளம் அளிக்கிறது

தலைப்பை பார்த்த உடன் தலை சுற்றுகிறதா ? இது உண்மை தான் இந்திய பொறியியல் கல்லூரி (IIT -M )  சென்னையில் நடந்த வேலை வைப்பு நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு Facebook  நிறுவனம் $85000 ( ஏறத்தாழ 38 லட்சம் இந்திய ரூபாய்கள் ) . ஆண்டு சம்பளம் அளிப்பதாக உள்ளது .

                   இந்த வேலைவாய்ப்பு நேர்காணல் SKYPE எனப்படும் இணையத்தில் முகம் பார்த்து பேசும் மென்பொருளின் உதவியுடன் நடந்தது என்பது  இன்னும் சுவையான செய்தி . இதன் உதவியுடன் அமெரிக்காவில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. 

பாகிஸ்தான் அரசு இணையதளங்கள் 35 ஹாக் (hack ) செய்து 26 /11 நினைவஞ்சலி

   கடந்த செவ்வாய் அன்று  இந்தியன் சைபர் ஆர்மி என்று தங்களை சொல்லிகொள்ளும் ஒரு குழு பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான வெழியுறவுதுரை அமைச்சகம் , பாகிஸ்தான் கடல்வழி ராணுவம் உட்பட 35 அரசு இணையதளங்களை தன்வசப்படுத்தி இந்திய கொடியை நாட்டினர்  .  அவர்கள் தங்களுடைய இணையதள முகவரியை அந்த படங்களில் இட்டு அனைவரின் கவனமும் அவர்கள்மீது திரும்பும்படி செய்தனர்.



 indishell என்னும் அவர்களுடைய இணயத்தை பார்க்கையில் ஒவ்வொரு இந்தியனுக்கும் அவர்களை பாராட்ட தோன்றியது ஏனெனில், அவர்களது இணைய முகப்பில் 26 \11 போராட்டத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் இருந்தது..  நாமும் இதை பாராட்டியே  ஆகவேண்டும் . 

பெங்களுருவில் செந்தமிழ் சீரழிவு ?

கடந்த மாதம் நான் பெங்களுருவில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்துவந்தேன் .  அங்கு தினமும் தினகரன் நாழிதல் படிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தேன் . அச்சமயம் கர்நாடக  மாநிலம் முழுவதும் கடுமையான மழை பெய்துகொண்டிருந்தது . குறிப்பாக ஷிமோகா மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்தது . 

                          அந்த செய்தியை ஷிமோகாவில் மழை நீடிப்பு என்று எழுதுவதற்கு மாறாக , " ஷிமோகாவில் மழை நீட்டிப்பு " என்று எழுதி இருந்தனர் . இதை கண்ட நான் அதிர்ச்சியுற்றேன் . இதை அனைத்து தமிழர்களுக்கும் அறியப்படுத்தவே இந்த இணையத்தில் பகிர்கிறேன் . 

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் மீது உளவு பார்த்த குற்றத்தின்கீழ் வழக்கு

ராணுவ ரகசியங்களை வெளியிடும் விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது உளவு பார்த்த குற்றத்துக்கான வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை சட்ட விரோதமாகக் கைப்பற்றி அவற்றை அவர் இணையதளத்தில் வெளியிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்படலாம். இத்தகவலை வாஷிங்டன் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
              
 அமெரிக்க அதிகாரிகள், இணையதளத்தின் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகிக்கும் அசாஞ்சேயிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.குற்றவியல் சட்டத்தின்படி நடைமுறை விதிகளை அசாஞ்சே மீறியதாக "வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை கணித்த ஆக்டோபஸ் பால் மரணம்


இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக்கோப்பை காலபந்துபோட்டியின் போது, காலிறுதி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி உள்பட 8 போட்டிகளின் முடிவுகளை துல்லியமாக கணித்துக் கூறியதால் உலகம் முழுவதும் காலபந்து ரசிகர்களிடையே மிகுந்த பிரபலம் அடைந்தது ஆக்டோபஸ் பால்.

இந்நிலையில், ஜெர்மனியின் ஓபர் அவுசனில் கடல்வாழ் உயிரினங்கள் அருங்காட்சியத்தில் வசித்த 3 வயதான ஆக்டோபஸ் பால் இயற்கையாக மரணம் அடைந்ததாக அருங்காட்சியக மேலாளர் ஸ்டீபன் பார்வோல் தெரிவித்தார். `

எங்களது இடத்திலேயே பாலை புதைத்து அதற்கு சிறிய சமாதி கட்டுவோம். பால் இறந்துவிட்டாலும் அது செல்போன்கள், டீசர்ட் போன்ற ஆடைகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அது பற்றிய தொகுப்பையும் வெளியிட இருக்கிறோம் என்று ஸ்டீபன் பார்வோல் தெரிவித்தார். 

வெண்டைக்காய் பச்சடி செய்வது எப்படி?

வெண்டைக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்-5 எண்ணம்
தேங்காய் துருவல்-1௦௦ கிராம்
சிறிய வெங்காயம்-5 எண்ணம்
சீரகம்-1/4 தேக்கரண்டி
உப்பு-தேவைகேற்ப
தயிர்-2 தேக்கரண்டி
கடுகு-தேவைகேற்ப
கறிவேப்பிலை-தேவைகேற்ப
செய்முறை விளக்கம்:
முதலில் தேங்காய் துருவலுடன் சிறிய வெங்காயம்,சீரகம் சேர்த்து கெட்டியாக அரைத்து வைக்க வேண்டும்.பின்பு வெண்டைக்காயை சிறிது சிறிதாக அரிந்து தேங்காய் எண்ணையில் சிறிது நேரம் வசக்கவும்.அதன் பின் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவையில் வெண்டைக்காயை போட்டு கிளறவும்.இந்த கலவையில் 2 தேக்கரண்டி தயிர் மற்றும் தேவைகேற்ப உப்பு சேர்க்கவும்.கடைசியில் தேங்காய் எண்ணையில் கடுகு,சிறிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து பச்சடியில் ஊற்றவும்.சுவையான வெண்டைக்காய் பச்சடி தயார்.

பார் வியக்கும் படைப்பு 1500 ரூபாய்க்கு கணினி - இந்தியா சாதனை

                      இந்திய அரசு 1500 ரூபாய்க்கு(35$) மடிக்கணினி ஒன்றை வெளியிட்டுள்ளது . இந்த படைப்பை உலகமே  வியர்ந்து பார்க்கின்றது. 2005-ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளுக்காக MIT ( Massachusetts Institute of Technology ) 100 $  என்ற விலையில் மடிக்கணினி தயாரித்ததே  இது வரை சாதனை ஆக இருந்தது. 


                                         இந்த மடிக்கணினியில் harddisk நிறுவப்படவில்லை அதற்க்கு பதிலாக கைபேசிகளில் பாடல்களை பதிவு செய்ய பயன்படும் மெமரி-கார்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது சூரிய ஒழி உதவியுடன் இயங்கதக்கது. 
                                       இதனை வெளியுடும்போது கபில்சிபல் " இந்த படைப்பு  MIT $100 மடிக்கணினிக்கு இந்தியாவின் பதிலடியாக இருக்கும்" என்று கூறினார் 

சுவையான தக்காளி ரசம் செய்வது எப்படி?




விருந்தோம்பல் என்பது தமிழ் மக்களின் ஒரு சிறந்த பண்பு ஆகும்.தமிழ் பெண்கள் சுவையாக சமைப்பதில் வல்லவர்கள்.ஒரே பதார்த்தத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்கள் வெவ்வேறு விதமாக சமைப்பார்கள்.தென்மாவட்டங்களில் சுவை மிகுந்த தக்காளி ரசம் எப்படி தயாரிப்பார்கள் என்று இப்பொழுது காணலாம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி-1
சிறிய வெங்காயம்-6
பூண்டு-5 பல்
தேங்காய் எண்ணெய்-தேவைகேற்ப
புளி-1 ஊறவைத்தது
கொத்தமல்லி மிளகு வறுத்து பொடித்தது-1 டேபிள் ஸ்பூன்
நல்லமிளகு பொடி-1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி-1சிட்டிகை
உப்பு-தேவைகேற்ப
காயம்-1 சிட்டிகை
கொத்தமல்லி தழை -சிறிதளவு
செய்முறை விளக்கம்:
முதலில் தக்காளி ,சிறிய வெங்காயம் , பூண்டு இவற்றை சிறிதாக நறுக்கி வெய்த்து கொள்ளவும்.பின்பு அடுப்பினில் வானலியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் விட வேண்டும்.எண்ணெய் காய்ந்த பின்பு நறுக்கி வைத்திருக்கும் காய்கறியை போட்டு சிறிது நேரம் வசக்கவும்.பின்பு ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தினால் மூடி வைத்து சற்று நேரம் வேகவிடவும். தண்ணீர் வற்றின பின்பு அந்த கலவையை வேறு ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். அதன்பின் தேவைகேற்ப தண்ணீர் ஊற்றி புள்ளி கரைசல்,வறுத்து பொடித்த கொத்தமல்லி மிளகு,நல்லமிளகு பொடி,மஞ்சள் பொடி,உப்பு,காயம் இவற்றை சேர்க்க வேண்டும்.கடைசியில் கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பில் கொதிக்க விட வேண்டும்.சுவையான தக்காளி ரசம் தயார்.

12 -ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடும் இணையதளங்கள்

தமிழக அரசு வருகிற மே 14 -ஆம் தியதி இந்த ஆண்டு (2010 ௦) +2 தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது .. தேர்வு முடிவுகள் வெளியாகும் சில முக்கியமான இணையதள முகவரிகள் பின்வருமாறு: 

மேலும் சில இணையங்கள் வெளியிட உள்ளன, அதைபற்றிய தகவல்கள் பிற்பாடு தகவல் ஏற்றம்  செய்யப்படும். எனவிய அடிக்கடி இந்த இணையத்தை பாருங்கள் ..

கூகுள் மொழி பெயர்ப்பு சேவை 52 மொழிகளுக்கு அதிகபடுத்தப்பட்டுள்ளது

சில நேரங்களில் நமக்கு சில வேற்று மொழிகளை மொழிபெயர்ப்பு செய்து படிக்கவேண்டிய நிலை ஏற்படும் , அத்தகைய சூழ்நிலையில் கூகுள் மொழி பெயர்ப்பு சேவை மிகவும் உதவிகரமாக இருக்கும். உதாரணமாக சில பிரான்ஸ் அல்லது ஜெர்மனி இணையதளங்களை எடுத்துகொண்டால் அவைகள் பொதுவாக பிரெஞ்சு அல்லது ஜேர்மன்  மொழிகளில் இருக்கும் . எனவே  நமக்கு புரிந்து கொள்ளும்படியாக இருக்க இவைகளை http://translate.google.com உதவியுடன் மொழிபெயர்ப்பு செய்து படிக்கலாம். 

தற்போது இந்த சேவை  54 மொழிகளுக்கு அதிகரிக்க பட்டுள்ளது சுவையான தகவல். இருப்பினும் அதில் தமிழ் இடம்பெறாதது  கொஞ்சம் கசப்பாக தான் இருக்கிறது :( 

வொடபோன் கைபேசி ரூபாய் 799 மட்டுமே


இங்கிலாந்து தகவல் தொடர்பு நிறுவனமான வொடபோன் தற்போது ஒரு புதிய கைபேசியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . இதன் விலை வெறும் 799 ரூபாய் மட்டுமே. இதன் சிறப்பம்சம் என்னவென்றல் இந்த கைபேசியில் எந்த நிறுவனத்தின் சிம் கார்டு'உம பயன்படுத்தலாம். இது மட்டுமன்றி மேலும் பல சிறப்பம்சங்களும் இலவச இணைப்புகளும் உள்ளன . அவை பின் வருமாறு

  • இலவச வாழ்நாள் இன்கம்மிங் சிம் கார்டு 
  • ஒரு வருடத்தில் ஏதேனும் பழுதடைந்தால் புதிய கைபேசி பெறலாம்
  • ஒழி (tourch ) வசதி
  • ஸ்பீக்கர் போன் வசதி
  • ஒரு மாதம் 30  பை  /நிமிடம் போன்ற இலவச சலுகைகல்லும் அளிக்க படுகிறது  



மேலும் பல வசதிகளுடன் உலவுகிறது இந்த புதிய வகை கைபேசி . பாத்து இருபது என்று சிம் வைத்திருபவர்களுக்கு இது வரபிரசாதமாக அமையும் என நினைக்கிறேன் .. இதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே  உள்ள Link 'ஐ கிளிக் செய்யவும்

http://www.vodafone.in/existingusers/products/handsets/pages/handset_landing.aspx?hid=12&ct=1&cid=tam 

ஒரு இந்தியன் (நிதின் நோஹ்ரியா) ஹார்வர்ட் B-School Dean

நண்பர்களே உங்களுக்கு தெரியுமா இந்தியர் ஒருவர் ஹார்வர்ட் பல்கலைகழக டீன் ஆக பதவியேற்றுள்ளார். அவர் ஒரு இந்தியன் இன்ச்டிடுடே of டெக்னாலஜி முன்னாள் மாணவர் . இவர் தான் முதல் Indian-American ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் dean  ஆவார்.
பதவியேற்பு முடிந்த பிறகு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியது என்ன தெரியுமா "இந்தியன் இன்ச்டிடுடே of டெக்னாலஜி, பாம்பே என்னை ஒரு உலக தரம் மிக்கவனாக மாற்றியது , அங்கிருந்து நான் பலவற்றை கற்றுகொண்டேன் " .. இவர் மூலமாக இந்தியர்கள் உலக அளவில் வரவேற்க படுகிறார்கள் என தெரிகிறது. இவரை பற்றி சில தகவல்கள் பின் வருமாறு:
  • பட்ட படிப்பை இந்தியன் இன்ச்டிடுடே of டெக்னாலஜி, பாம்பே இல் 1984 'இல் முடித்தார்
  • PHD (Doctrate ) ஐ MIT இல் 1988 'இல் முடித்தார்
  • Business தொடர்பாக 16 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்
உலகின் மிக சிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றில் இந்தியர் ஒருவர் dean ' ஆக இருப்பது நமக்கு பெருமை தானே ..

வாசிபாளர்களுக்கு காசு வழங்கும் இணையதளம்

                           
                 பல இணையதளங்கள் online மூலம் பணம் சம்பாதிப்பது ஏப்படி என வலி காட்டுகிண்டன .. ஆனால் இங்கே ஒரு இணையத்தளம் வசிபாலர்களுக்கு காசு வழங்குகிறது .


                         உங்களுக்கு பிடித்த தகவல்கள் வெளியிடப்படும்போது உங்களுக்கு   மின் அஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும். நீங்கள் எளிதாக அந்த அஞ்சலில் உள்ள லிங்க்'ஐ பின் தொடர்ந்து தகவலை படிக்க வேண்டும் . அவ்வளவு தன .. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் .. புதிய தகவல்களும் தெரிந்து கொள்ளலாம் , கை செலவுக்கு காசும் பார்க்கலாம் .. அவசரபடாதீர்கள் கிழிய உள்ள படத்தில் கிளிக் செய்து உங்கள் பங்கை ஆரம்பியுங்கள் ..
                        readbud - get paid to read and rate articles

சிறந்த ஆன்டி வைரஸ் புரோகிராம்கள்


                                         வைரஸ்கள் வந்து வந்து போகின்றன. ஒரு சில தொடர்ந்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கின்றன. புதிதாய் வரும் வைரஸ்கள் எத்தனை நாட்கள் தங்கி இருந்து தொல்லை கொடுக்கும் என்று நம்மால் கணிக்க இயலவில்லை. ஆனால் இவற்றைத் தேடி அழிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து இயங்குகின்றன. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் என்று கேள்விப்பட்டவுடன் நம் மனதிற்கு வருவது சைமாண்டெக், மெக் அபி, நார்டன் ஆகியவையே. ஆனால் இன்னும் பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் அவ்வளவாகப் புகழ் பெறாமல் உள்ளன. இவை செயல்பாட்டில் பிரபலமான புரோகிராம்களுக்கு இணையாகவே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.





1. பிட் டிபன்டர் (BitDefender) பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், விண்டோஸ் மட்டுமின்றி லினக்ஸ் சிஸ்டங்களிலும் இயங்கி செயல்புரிகிறது. அத்துடன் மெயில் சர்வர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் எதிர்ப்பு பணியை மேற்கொள்கிறது.

                      இந்த இலவச புரோகிராமினைhttp://www.bitdefender.com/ என்ற தளத்தில் பெறலாம்.


2. அவிரா ஆண்ட்டிவிர் (Avira Antivir): இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மற்ற புரோகிராம்கள் கண்டுபிடிக்காத சில வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்கும் வழிகளைத் தருகிறது. அதே போல மற்றவற்றைக் காட்டிலும், கூடுதல் வேகத்தில் இது செயல்படும். இதனைப் பெற http://www.avira.com/en/products/index.php  என்ற தளத்திற்குச் செல்லவும்.

3. கிளாம் ஏவி (Clam AV): இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும் சர்வர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. அத்தகைய சர்வர்கள் வைத்திருப்போர் கட்டாயம் இதனை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும். இதனைப் பெற http://www.clamav.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். 


4.அவாஸ்ட் (Avast): : மற்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் போல இது பெயர் பெற்றது இல்லை . ஆனால் இந்த புரோகிராம் தருவது போல பல ஆப்ஷன்களை மற்ற புரோகிராம்கள் தருவது இல்லை. இதன் தள முகவரி:http://www.avast.com/




5. ஆர் கே ஹண்டர் (rk hunter) : இதன் சிறப்பு இது ஒரு ரூட்கிட் எதிர்ப்பு டூலாகும். நம்மில் பெரும்பாலானவர்கள் ரூட்கிட் நமக்கு தரக்கூடிய பாதிப்புகளை அறிந்திருப்பது இல்லை. மேக் கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் இது சேதத்தை விளைவிக்கும். உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ரூட்கிட்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கவில்லை என்றால்,இதனை உடனே நிறுவுவது அவசியம். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://rkhunter.sourceforge.net/ என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

6. டாக்டர் வெப் க்யூர்இட்  (Dr.Web CureIt):  இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது ஒரு சிறிய பைனரி பைல். இதன் மீது டபுள் கிளிக் செய்தால், அது நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும். இதில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. இதன் அண்மைக் காலத்திய மேம்படுத்தப்பட்ட புரோகிராமினை அப்படியே அப்டேட் செய்திட முடியாது. மீண்டும் புதிதாக டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இதனை போர்ட்டபிள் வைரஸ் ஸ்கேனராகப் பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு http://www.freedrweb. com/cureit/?lng=en என்ற இணைய தளத்தினை அணுகவும்.


7. இ செட் ஸ்மார்ட் செக்யூரிட்டி  (ESET Smart Security): NOD32 என்னும் ஆண்ட்டி வைரஸ் டூலைத் தந்தவர்களே இதனையும் தந்துள்ளனர். இது ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களாகச் செயல்படுகிறது. இதன் பயர்வால் செயல்பாடு சற்று விசித்திரமானது. இது இருக்கும் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை, நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, அதற்கேற்ற வகையில் செயல்படுகிறது. டேட்டா திருடு போகாமலும், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல்பாட்டை முடக்கும் வைரஸ்களை இயங்கவிடாமலும் இது தடுக்கிறது. மேலும் தகவல்களுக்கு http://www.eset.com/home/smartsecurity என்ற தளம் செல்லவும்.

8. ஐ ஆண்ட்டி வைரஸ் (iAnti Virus): இதன் பெயரில் உள்ள ஐ என்பதைப் பார்த்தவுடன் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மேக் கம்ப்யூட்டர்களுக்கானது என்று அறிந்திருப்பீர்கள். மேக் கம்ப்யூட்டர்களில் எல்லாம் வைரஸ் வராது என்று சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் என அனைத்து வகை சிஸ்டங்களிலும் வைரஸ்கள் புகுந்து நாசம் விளைவிக்கின்றன. இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்படுவதும், மேக் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ் போல ஒன்றின் வழியாகத்தான். மேக் சிஸ்டத்திற்கு மிகச் சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இது. கூடுதல் தகவல்களுக்கு http://www.iantivirus. com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். 


9. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials) : பல்வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை மேலே பார்த்தோம். மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள இதனையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு, மைக்ரோசாப்ட் தரும் இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இலவசமாகும். பொதுவாக மைக்ரோசாப்ட் மற்றும் இலவசம் என்ற இரண்டும் இøணையாது. இது ஒரு விதிவிலக்காகும். இதனைப் பெறவும், தகவல்களை அறியவும் http://www.microsoft.com/security_essentials/ என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளம் செல்லவும்.

10. ஸோன் அலார்ம் (Zone Alarm)மற்ற ஆண்ட்டி வைரஸ் தராத ஒரு சிறப்பான உதவியை ஸோன் அலார்ம் செய்கிறது. டேட்டா லாக் என்னும் டூலை ஸோன் அலார்ம் தருகிறது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் டேட்டாவிற்கு என்கிரிப்ஷன் மூலம் பாதுகாப்பு தரும் வேலையையும் இது மேற்கொள்கிறது. எனவே என்கிரிப்ஷன் கீ இல்லாதவர்கள் டேட்டாவினப் படித்து அறிய இயலாது. அதே போல கம்ப்யூட்டரை பூட் செய்வதிலும் இது பாதுகாப்பு தருகிறது. எனவே ஆண்ட்டி வைரஸ், என்கிரிப்ஷன், பூட் அனுமதி என கூடுதல் வசதிகளையும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிரம் தருகிறது. மேலும் தகவல்களுக்கு http://www.zonealarm. com/  என்ற தளம் செல்லவும்.

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...