திருமுருகன் காந்தி சொல்வது உண்மையா ?

திருமுருகன் காந்தி அவர்கள் சில தகவல்களை பரப்பி வந்தார் . அவற்றுள் மிகவும் முக்கியமானது இந்திய அரசு  உலக வணிக அமைப்பு (WTO )(குறிப்புதவி-1) என்ற சர்வதேச அமைப்புடன் செய்த ஒப்பந்தம்.

அவருடைய கருத்து :
இந்திய அரசு ஒரு ஒப்பந்தம் மூலமாக நியாய விலை கடைகளை மூட திட்டமிட்டுள்ளதாகவும் . இந்த ஒப்பந்தம் உலக வணிக அமைப்பு உடன் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறி இருந்தார்(குறிப்புதவி-5)


உண்மை நிலவரம் :
உலக வணிக அமைப்பு பொதுவாக இரண்டு ஒப்பந்தங்களால் , ஒவ்வொரு உறுப்பு நாட்டு ஏற்றுமதியும் மற்ற உறுப்பு நாடுகளில் சரியான முறையில் சந்தை படுத்த துணை புரிகிறது .

அவ்விரு ஒப்பந்தங்கள் :
(1) வர்த்தக எளிமையாக்க ஒப்பந்தம் (குறிப்புதவி-2)
(2) உணவு பொருட்கள் சேமிப்பு மற்றும் கையிருப்பு வைத்தல் தொடர்பான ஒப்பந்தம் (குறிப்புதவி-3)

இவற்றுள் வர்த்தக எளிமையாக்க ஒப்பந்தம், பொருட்களை துறைமுகங்களில் இருந்து வேகமாக அனுப்பவும் , பெறவும் வழி செய்யும் ஒரு ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தை இந்திய அரசு நிராகரித்து வந்தது. அதற்கு காரணம் , மேற்குறிப்பிட்டுள்ள இரண்டாவது ஒப்பந்தமாகும்.

இரண்டாவது ஒப்பந்தத்தின் படி விவசாயிகளுக்கு மானியம் வழங்கும்போது , "மொத்த மானியத்தொகையானது  1986-88 ஆம் ஆண்டு விலைகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தியின் மதிப்பில் 10%க்கும் மேல் இருக்கக் கூடாது" என்பதாகும். இதனை இந்திய அரசு எதிர்த்து வந்தது.

    உலக வணிக அமைப்பின் சட்டபடி அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்று கொண்டால் தான் ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படும். அனால் இந்திய அரசு மேற்கூறிய இரு ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இவ்விரு ஒப்பந்தங்களை நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதை கண்டித்தன. அனால் இந்திய அரசு விடா பிடியாக இருந்ததன் விளைவாக "அமைதி ஒப்பந்தம் " மூலமாக இந்திய நாட்டிற்கு மட்டும் இந்த மானிய ஒப்பந்தத்தில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டது . அதன் விளைவாக இந்திய அரசு  "வர்த்தக எளிமையாக்க ஒப்பந்தத்தை " ஏற்று கொண்டது. (குறிப்புதவி-6)

இந்த ஒப்பந்தங்களில் நியாயவிலைக்கடை பொருட்கள் பற்றி எந்த ஒரு பிரிவும் கையெழுத்தாகவில்லை.

இதிலிருந்து திருமுருகன் காந்தி அவர்கள் மக்களிடம் தவறான தகவலை பரப்புகிறார் என தெரிய வருகிறது.

இந்திய அரசு அவர் கூறுவது எதுவும் உண்மை இல்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

             உலக வணிக அமைப்பின் செய்திகள் மிகவும் கடினமான முறையில் , சாதாரண மக்களுக்கு புரியாத நிலையில் இருக்கும். அதனால் தகவல்களை தவறாக புரிந்துகொண்டாரா ? இல்லையேல் அரசியல் எண்ணம்கொண்டு , பொய்யுரைத்தாரா ?


குறிப்புதவிகள் :

1.https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

2. https://www.wto.org/english/tratop_e/tradfa_e/tradfa_e.htm

3. http://www.business-standard.com/article/news-ians/india-working-for-solution-to-wto-food-stockholding-issue-115072201514_1.html

4. http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=144868

5. https://www.youtube.com/watch?v=CZk6oNcIKLs

6. http://www.thehindubusinessline.com/opinion/all-you-wanted-to-know-about-peace-clause/article6280907.ece

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...