பெப்சி கோக் வேண்டாம், விசா மாஸ்டர் வேண்டுமா! ஒரு அலசல்

கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் பெப்சி கோக்  பானங்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு வாடிக்கையாளர் மனமாற்றமே காரணம். இதன் பின்னணி அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால் இந்த குளிர்பான நிறுவங்களை விட அதிக ஆதிக்கம் செலுத்துவதும் , நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதும் , பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதிலும் அதிக பங்கு வகிப்பது விசா மாஸ்டர் போன்ற அந்நிய மென்-கட்டண-நுழைவாயில் (PaymentGateway) நிறுவனங்கள் .

ஏன் ?:

கடந்த சிலபல வருடங்களில் ரஷ்யா சந்தித்த நெருக்கடிகளில் சிலவற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. எப்பொழுதெல்லாம் ரஷ்யா அரசின் மீது பொருளாதார தடை விதிக்க படுகிறதோ அப்போழுதெல்லாம் , அமெரிக்கா மற்றும் வேற்று நாட்டு மென்-கட்டண-நுழைவாயில்கள் ரஷ்யாவில்  செயல்படுவதை நிறுத்தவோ அல்லது குறைத்துக்கொள்ளவோ செய்துவிடும்.

இந்த தொடர் நிகழ்வினால் கோபமுற்ற ரஷ்யா அரசு , தன்னுடைய உள்நாட்டு தயாரிப்பான மீர் (Mir Payment ) முறையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதை தாமதமாக செய்ததனால் பெரிய அளவில் பொருள் மற்றும் இதர இழப்புகள் ஏற்பட்டன.



இந்த நிகழ்வில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட இந்திய அரசு , NPCI என்ற RBI உதவியுடன் நிறுவப்பட்ட அமைப்பின் உதவியுடன் RuPay என்ற உள்நாட்டு சேவையை 2012-ஆம் ஆண்டு நிறுவியது. ரூபே ஒப்பீட்டை கீழே படிக்கவும் 


ரூபே (Rupay)
மாஸ்டர் / விசா (Master/Visa)
பணபரிமாற்ற சர்வர் அமைந்துள்ள இடம்
இந்தியா
அமெரிக்கா போன்ற வெளிநாடுகள்
தினசரி பணபரிமாற்றங்கள் 
20% (மொத்த பரிமாற்றத்தில்)
வெளியிடப்படவில்லை
வங்கிகள் சராசரியாக ஒவ்வொரு பணபரிமாற்றத்திற்கும் செலுத்தும் தொகை
45 பைசா
3 ரூபாய்
நிறுவனர்
இந்திய அரசு
வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள்
அதிக பயன்பாட்டின் விளைவு
1)இந்திய பொருளாதாரம் நிலைத்தன்மை அடைய உதவும் (அந்நிய செலவாணி கையிருப்பு). 2) வெளிநாட்டு அமைப்புகள் அல்லது அரசுகளின் தடைகள் நம்மை பாதிக்காது
1)அந்நிய செலவாணி கையிருப்பு குறைகிறது,
2) அந்தந்த நாடுகளின் சட்டங்களை பின்பற்றவேண்டிய நிலையில் இந்நிறுவனங்கள் இருப்பதனால் அவசரகாலங்களில் நம் நாட்டிலும் ரஷ்யா போன்ற நிலை ஏற்படலாம்.
குறைகள்
மாதாந்திர பயன்பாட்டு அளவுகள் விதிக்கப்பட்டுள்ளதால் . குறைந்த அளவே பணப்பரிமாற்றம் செய்ய முடிந்தது . ஆனால் பிளாட்டினம் சேவை மூலம் அந்த குறையை போக்கியுள்ளது
தனிமனித அளவில் குறைகள் எதுவும் இல்லை என்று கூறலாம் , ஆனால் ஒரு நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு குறைகிறது. இது அந்த நாட்டின் பணமதிப்பை சர்வதேச நிலையில் பாதிக்கிறது.

இந்திய அளவில் அனைத்து  ATM மையங்களிலும் , 90% விற்பனை முனையங்களிலும் (PoS) ரூபே பயன்படுத்தலாம். அடுத்தமுறை வங்கிக்கு செல்லும்போது இந்த ரூபே அட்டையை வாங்கி பயன்படுத்தி பார்த்துவிடுங்கள் . 

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...