திருக்குறள்

திருக்குறள்-இந்நூல் திருவள்ளுவரால் இயற்றபெற்ற உலக புகழ் பெற்ற ஒரு இலக்கியம் ஆகும்.இதில் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.ஒரு அதிகாரத்தில் 10 குறள்கள் வெய்த்து மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன.ஒரு குறள் இரண்டு வரிகள் கொண்டது.













கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் இரவுதோற்றம்
மனித வாழ்விற்கு தேவையான அடிப்படை ஒழுக்கமும் நீதி நெறிகளையும் அழகாக முப்பால்(அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால்) என்னும் மூன்று பிரிவுகளில் எளிமையாக தந்துள்ளார்.
உலகத்திலேயே ஏராளமான மொழிகளில் மொழிபெயர்க்கபட்டுள்ள ஒரே தமிழ் நூல் ஆதலால் திருக்குறள் உலகபொதுமறை என்றும் அழைக்கபடுகின்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
முப்பால்,பொதுமறை,தமிழ்மறை, தெய்வநூல்,உத்தரவேதம் ,திருவள்ளுவம்,பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, திருவள்ளுவம்.
திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து எனப்படும்.திருக்குறளை திருவள்ளுவர் இந்த அதிகாரத்தில் கடவுள் வாழ்த்துடன் துவங்கியுள்ளார்.
"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு"
இப்புனித நூலை இயற்றிய திருவள்ளுவருக்கு முக்கடல் சங்கமிக்கும் குமரியில் முதலமைச்சர் கருணாநதி அவர்கள் வானுயர சிலை அமைத்து பெருமைப்படுத்தினார்.இந்த சிலையின் உயரம் 133 அடி ஆகும்.

திருக்குறளின் மென்புத்தகத்தை இறக்கம் செய்வதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.

ஹச்.சி.எல் சிவ நாடார்

சிவ நாடார்- இவர் தமிழக தொழிலதிபரும் ஹிந்துஸ்தான் கம்பியுடேர்ஸ் லிமிடெட்(ஹச்.சி.எல்)-ன் நிர்வாக ஆளுநராகவும் தலைவராகவும் இருந்து வருகிறார்.




















இவர் தூத்துக்குடியில் மூலைபொழி என்னும் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.
பட்டப்படிப்பு-(PSG) பொறியியல் கல்லூரி,கோயம்பத்தூர்.


















டாக்டர் ஆ பி ஜே அப்துல் கலாமுடன் சிவ நாடார்

ஒரு சாதாரண கணினி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் 1976ஆம் ஆண்டில் அஜய் சவுதிரி என்பவருடன் சேர்ந்து எச்.சி.எல் என்னும் நிறுவனத்தை தொடங்கினார்.
இன்று எச்.சி.எல் கணினி துறையில் மிகவும் பிரபலமான மென்பொருள் மற்றும் கணினி நிறுவனமாக விளங்குகிறது.

ஜி. மாதவன் நாயர்

ஜி. மாதவன் நாயர் -இஸ்ரோவின் முன்னாள் முதல்வர்.இவர் அக்டோபர் 31, 1943ம் ஆண்டு கேரளா மாநிலம் நெய்யாற்றிங்கரையில் பிறந்தார்.














கன்னியாகுமரி(தமிழ்நாடு) மாவட்டத்தில் பள்ளி பயின்றார். 1966 ம் ஆண்டு திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரோநிக்ஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார்.அதற்க்கு பின்னர் மும்பை பாபா அணுமின் நிலையத்தில் பயிற்சி பெற்றார்.












மாதவன் நாயர் அவருக்கு இந்தியாவின் இரண்டாவது பெரிய விருதான பத்ம விபூஷன் ஜனவரி 26,2009 ம் ஆண்டு அளித்தனர்.1967 முதல் 2009 வரை இந்திய நாட்டிலிருந்து ஏராளமான ராக்கெட் அனுப்புவதற்கு இவர் பெரும் பங்கு வகித்துள்ளார்.

விசுவநாதன் ஆனந்த்

விசுவநாதன் ஆனந்த்-இந்தியாவின் சதுரங்க கிராண்ட்மாஸ்டர் மற்றும் தற்போதைய உலக சதுரங்க சாம்பியன். இவர் டிசம்பர் 11,1969-ல் தமிழ்நாட்டில்(சென்னை) பிறந்தார்.1994 ம் ஆண்டில் இருந்து சதுரங்க போட்டியில் தொடர்ந்து முன்னிலை வகித்து சாதனை படைத்தது வருகிறார்.FIDE ELO என்கின்ற மதிப்பீட்டின்படி ஜூலை 2006ல், 2800 புள்ளிகளை தாண்டிய நால்வரில் ஒருவர் ஆனந்த் ஆவர்.


















தந்தை-விஸ்வநாதன் தென்னக ரயில்வேயில் ஜெனரல் மேனேஜர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர்.
ஆரம்பக்கல்வி-டான் போஸ்கோ , எழும்பூர் , சென்னை
உயர்க்கல்வி- லயோலா கல்லூரி, சென்னை .

இந்த வெற்றித் தமிழனின் வெற்றிகளை கீழே பட்டியலிட்டுள்ளேன் :

  • 1983 -14 வயதில் தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர்
  • 1984 -15 வயதில் தேசிய மாஸ்டர்
  • 1985- 16 வயதில் இந்திய தேசிய வெற்றிவீரர்
  • 1987 -உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர், கிராண்ட்மாஸ்டர்
  • 2000-சதுரங்க வெற்றிவீரர்
  • 2003-அதிவேக சதுரங்க வெற்றிவீரர்






















விஸ்வநாதன் ஆனந்திற்கு கிடைத்த பெருமைக்குரிய விருதுகள் சில:


  • சதுரங்க ஆஸ்கார்-இந்த விருதினை அவர் 1997,1998,2003 மற்றும் 2004 வரை தக்க வைய்த்துள்ளார்.
  • பத்மபூஷன்-2000
  • ராஜீவ் காந்தி கோஅல் ரெத்னா விருது-1991,1992
  • தேசிய குடிமகனுக்கான பத்மஸ்ரீ விருது-1987
  • விளையாட்டு வல்லுனருக்கான சதுரங்க விருது-1985
இப்படி ஒரு உலக புகழ்மிக்க தமிழனுக்காக நாம் பெருமை கொள்ளுவோம்.

நடிகர் ஜெயராம் தமிழ் தாய்மார்களிடம் மன்னிப்பு கோரினார்.

மலையாள நடிகர் ஜெயராம் ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.அவர் சில நாட்களுக்கு முன் கேரளாவில் உள்ள ஏசியாநெட் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியின்போது, ஒரு கேள்விக்கு, "என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி. எருமை போன்ற அவளை எப்படி சைட் அடிக்க முடியும்?" என்று பதில் கூறியிருந்தார்.

அவருடைய புதிய மலையாள படமான "ஹாப்பி ஹஸ்பண்ட்ஸ்"-ல் தமிழ் பெண்களை இழிவு படுத்தி பேசியுள்ளார்.அவருடைய இந்த பேட்டி, தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஜெய்ராமின் வீடும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது.இந்நிலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:










"சென்னையில்தான் 18 வருடங்களுக்கு மேலாக வசிக்கிறேன். தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்தினால் அது என் தாயை இழிவு படுத்துவதற்கு சமம் என நினைத்துக் கொள்
பவன். டி.வி. பேட்டியில் நான் பேசிய வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு உள்ளன. நான் நடித்த படங்களில் இதுவரை தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்தும் விதமான காட்சிகள் இல்லை. நான் பேசிய வார்த்தைகள் தமிழ்த் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் மீண்டும் கைகூப்பி வருத்தம் தெரிவிக்கிறேன் என்றார்.அவரது மகன் மற்றும் மகளுக்கு கிடைத்த விருதுகள்,அவருக்கு கிடைத்த பல்வேறு விருதுகள் அனைத்தையும் தமிழ் மர்ம நபர்கள் சேதபடுதியதற்காக வருத்தம் தெரிவித்தார்."


தனது பேச்சுக்கு நடிகர் ஜெய்ராம் மன்னிப்புக் கோரியதையடுத்து, அவர் மீது அளிக்கப்பட்ட அவதூறுப் புகா
ர் வாபஸ் பெறபட்டது.


இதனைப்பற்றி முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் கூறுகையில்:"நடிகர் ஜெயராம் மன்னிப்பு கேட்ட நிலையில் மறப்போம் மன்னிப்போம் என்கின்ற அண்ணாவின் கொள்கையின் படி அவரை மன்னிப்போம் என்றார்."

அசல்

அசல்-சரணின் இயக்கத்தில் வெளிவந்துள்ள தமிழ்த் திரைப்படம் ஆகும்.சிவாஜி பிலிம்ஸ்(ராம்குமார்,பிரபு) தயாரிப்பில் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிப்பில் இப்படம் வெளிவந்துள்ளது.யூகிசேது கதை எழுதியுள்ளார்.அஜித்துடன் சமீரா ரெட்டி,பாவனா,பிரபு,ராஜீவ் கிருஷ்ணா,சம்பத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல்களுக்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளர். இவர் காதல் மன்னன்,அமர்க்களம் தொடங்கி நான்காவது முறையாக அஜித் சரண் கூட்டணியில் இனணகிறார் .அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.இப்படத்தில் ஏழு பாடல்கள் உள்ளன.அவற்றை சுனிதா மேணன்,சூர்முகி, ஹீரீ சரன், பரத்வாஜ்,முகேஷ், ஜணனி,எஸ். பி. பாலசுப்பிரமணியம்,சூர்முகி, குமரன் ஆகியோர் பாடியுள்ளனர்.

அசல் அஜித்தின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.எனவே இப்படத்தினை திருட்டு விசிடி யில் காணமல் திரையரங்கங்களில் சென்று கண்டு மகிழ்வோம்.

அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் அக்டோபர் 15 ம் நாள் 1931 ம் வருடம் தமிழ்நாட்டில் பிறந்தார்.2002ம் வருடம் முதல் 2007ம் வருடம் வரை இந்தியாவின் பதினொன்றாவது குடியரசு தலைவராக பதவி வகித்தார். அவரது பதவிக்காலத்தில் "மக்களின் தலைவர்" என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டார். குடியரசு தலைவராவத்திற்கு முன்பு விமான பொறியாளராக இஸ்ரோவில் பணியாற்றினார்.
உலகம் முழுவதிலுமாக உள்ள பல பல்கலைகழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் அளித்து கவுரவித்துள்ளன.1981ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசாங்கமானது நாட்டின் மிகப்பெரிய விருதான பத்மபூஷன் அளித்துள்ளது.அதற்க்கு பின் 1990ல் பத்மவிபூஷன் மற்றும் 1997ல் பாரத ரெத்னா...

அவரது "இந்தியா 2020" என்கின்ற புத்தகத்தில் 2020ல் நமது இந்திய நாட்டினை வல்லரசாக மாற்றுவதற்கான வழிமுறைகளை சுட்டிக்காட்டி உள்ளார்.இவர் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் ஆசிரியராக ணியாற்றியுள்ளார்.அது மட்டுமல்லாமல் பல்வேறு கல்லூரிகளில் பகுதி நேர ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

கலாம் ஒருசாதாரண முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவர்.இவரது தந்தை, ராமேஸ்வரதில்லுள்ள மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்காக கப்பல்களை வாடகைக்கு அளித்து வந்தார்.கலாம் தன்னுடைய படிப்பு செலவிற்காக தினசரி பத்திரிக்கை விற்று தன்னுடைய வாழ்கையை துவங்கினார்.

ராமேஸ்வரதில்லுள்ள குடும்பத்தினருடன் கலாம்

கலாம் திருக்குறளை நன்கு கற்றவர்.அவரது பேச்சுகளில் குறைந்த பட்சம் ஒரு குறளாவது எடுத்து சொல்லுவது வழக்கம்.1964ம் ஆண்டு அவரது 33-ம் வயதில் ஒரு பெரும் புயலினால் கலாமினுடைய சொந்த ஊரான தனுஷ்கோடியில் இருந்த பாம்பன் பாலம் தகர்ந்து ஒரு ரயில் முழுவதுமுள்ள பயணிகள் மடிந்தனர்.இந்த சம்பவத்தை அவர் "அக்கினி சிறகுகள்" என்கின்ற புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.அக்கினி சிறகுகள் புத்தகத்தினை தகவல் இறக்கம் செய்ய பின்வரும் லிங்கினை கிளிக் செய்யவும்:

http://www.4shared.com/file/217614297/db6711f8/Wings_of_fire_by_Abdul_Kalam.html


இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர் ஏராளம் நூல்களை எழுதியுள்ளார்.இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் தோள்களில் உள்ளது என்றார்.குழந்தைகளிடம் பெரிய கனவுகளை காண சொன்னார்.கலாம் எப்பொழுதும் மாணவர்களுடன் இருப்பதையே விரும்புவார்.பதவியில் இருப்பதை விட மாணவர்களுடன் இருப்பதே மகிழ்ச்சி என்றார்.


மாணவர்களுடன் அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


அவரது பொன்மொழிகளில் ஓன்று:"உங்கள் கனவு நிஜமாவதற்கு முன்னதாக நீங்கள் கனவு காண வேண்டும்."




"3 இடியட்ஸ்" வரலாறு படைக்கிறது மகிழ்ச்சியில் R . மாதவன்

                        பாலிவுட் மற்றும் இந்திய திரைப்பட வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய வசூலை கண்டிருக்கிறது 3 இடியட்ஸ் திரைப்படம். இதில்  ஆமிர் கான் , மாதவன் (தமிழன்) , ஷார்மன் ஜோஷி , கரீனா கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 40 நாடுகளில் 2000 பிரிண்ட்கள் போடப்பட்டு வெளிவந்தது.

                                                தற்போது இது வசூலில் சாதனை படைக்கிறது. திரையிட்ட முதல் நான்கு நாட்களிலேயே நூறு கோடி ரூபாய்களை அள்ளி இருக்கிறது . இதுவரை சாதனையாக இருந்த கஜினி ( ஹிந்தி) சாதனை இதனால் முறியடிக்கப்பட்டது .

                                இத்திரைப்படத்தின் வெற்றியில் நம்மவர் மாதவன் பங்கு மிக அதிகம். அவர் இதற்காக உடல் எடையை குறைத்துள்ளார் மேலும் பல சிறப்பம்சங்கள் உள்ளன. முடிந்தால் இதை பாருங்கள் (ஒரு தமிழனின் வெற்றியை பார்த்து நாமும் சந்தோசப்பட வேண்டும் அல்லவா )

கன்னியாகுமரி ஸ்பெஷல் உணவு வகைகள்

நமது தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊர்களுக்கும் வெவ்வேறு உணவு பழக்கவழக்கங்கள் உள்ளன.ஒரு ஊரின் உணவினை வைத்து அந்த மக்களின் தன்மையை உணர முடியும். தமிழ்நாட்டின் தென்மாவட்டமாகிய கன்னியாகுமரியின் உணவு பழக்கவழக்கதினை காணலாம். பொதுவாக சோறு தான் இம்மாவட்ட மக்களின் அடிப்படையான உணவு.எனினும் மலைவாழ் மக்கள் சிலருக்கு கிழங்கு தான் முதல் உணவு.
இங்கு வாழும் மக்களுக்கு பிடித்த உணவாக மீன்,இறைச்சி மற்றும் காய்கறிகள் காணப்படுகின்றன.அதிலும் இம்மாவட்டத்தின் சுற்றுமுள்ள கடல் பகுதியில் இருந்து கிடைக்கும் கடல்மீனனது அவர்களின் தினசரி உணவில் பெரும் பங்கு வகிக்கிறது.இங்கு பெரும்பாலும் செய்கின்ற பதார்த்தங்களில் தேங்காய் முக்கிய பொருளாக இருக்கும். இந்த மாவட்டத்தின் உணவு பொருள்களை ருசித்தவர்கள் மீண்டும் உண்ண விரும்பும் அளவிற்கு சுவை மிகுந்த பதார்த்தங்கள் இங்கு உள்ளன.கன்னியாகுமரி மாவட்ட மக்களின் சிறப்பான உணவுகள் சில: அவியல்,தேங்காய் சோறு ,வாழைக்காய் பொரியல்,மீன் கொழம்பு, சேமியாபாயசம்.

கேரளா மாநிலத்தின் அருகில் குமரி இருப்பதால் இங்கு சமைக்கும் உணவுகளில் கேரளா பதார்த்தங்களின் சுவையும் தெரிகின்றது.அதிலும் அரிசி புட்டு குமரி மக்களால் விரும்பி உண்ணபடுகின்ற ஓன்று.

தமிழ்நாட்டு கோவில்கள்

தமிழ்நாடு இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது.பழமை வாய்ந்த கலாசார சின்னங்களும்,இயற்க்கை எழில் கொஞ்சும் நீலக்கடற்கரைகளும் தமிழ்நாட்டின் சிறப்பம்சம்.நமது கோயில்களும் வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னங்களும் கலைநுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. தமிழ்நாட்டில் ஏராளமான கோவில்களும் பள்ளிவாசல்களும் தேவாலயங்களும் உள்ளன.தமிழ்நாட்டின் பிரபலமான பழமை மிக்க சில கோவில்கள்:

சிதம்பரம் நடராஜர் கோவில் :
சிதம்பரம் பஞ்சபூத(நிலம்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம்)ஸ்தலங்களில் ஒன்றாகும்.இந்த கோவிலில் நடராஜர் அனந்த தாண்டவம் புரிந்து கொண்டிருப்பார்.
மதுரை மீனாக்ஷி கோவில்:
இந்த கோவில் 1660இல் சிவனுக்கும் பார்வதி தேவிக்கும் செய்யப்பட்டது. இக்கோவிலில் மொத்தம் 14கோபுரங்கள் உள்ளன,அவற்றில் இரண்டு கோபுரங்கள் தங்கத்தால் செய்யப்பட்டன.
கோவில் கோபுரத்தின் முழு உயரம்170அடி ஆகும்.
திருபோரூர் முருகன் கோவில்:
இது முருக பெருமானை வழிபடுவதற்காக பல்லவர்கரால் கட்டப்பட்ட கோவில்

ராமேஸ்வரம் கோவில்:

ராமேஸ்வரம் இந்தியாவின் புகழ்மிக்க புனித ஸ்தலமாக இருந்து வருகிறது. ராமேஸ்வரம் செல்லாமல் ஒருவருடைய புனிதபயணம் நிறைவேறாது என்பர்.இந்த கோவில் தமிழ்நாட்டில் ராமநாதபுரத்தில் உள்ளது.ஸ்ரீராமர் ராவணனை வீழ்த்துவதற்கு துணை புரிந்த காரணத்திற்காக சிவபெருமானிடம் ராமர் நன்றி தெரிவித்த ஸ்தலமாக ராமேஸ்வரம் கருதப்படுகிறது.

ராமேஸ்வரம் கோவிலின் உள்தோற்றம்

கன்னியாகுமரி கோவில்:
முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் அழகாக வீற்றிகிறது இக்கோவில்.கன்னியாகுமரி தேவியின் பெயரில் தான் இம்மாவட்டம் கன்னியாகுமரி என பெயர் பெற்றது.கன்னியா தேவி பார்வதி தேவியின் அவதாரம் என்றும்,சிவபெருமானை மணக்க எண்ணி இறுதி வரையிலும் நடக்க வில்லை என்பதும் வரலாறு.
கன்னியாகுமரி தேவி கோவிலின் முக்கிய வாயில்

ஜெய் ஹோ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 கிராமி விருதுகள்

         
           ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு இசைய அமைத்ததற்காகவும், அப்படத்தின் பின்னணி இசைக்காகவும் இசைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அளிக்கப்பட்டது

  • சிறந்த பாடலுக்கான விருது குல்சார், தன்வீ ஷா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது
  • சிறந்த பின்னணி இசை விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அளிக்கப்பட்டது.





அவரை புகழ்ந்து  சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர் விருது பெற்ற காட்சியை கீழே உள்ள சிறு திரையில் கண்டு மகிழுங்கள்


பகவத் கீதை குறுகிய வடிவில்



எனது நண்பர்களில் ஒருவர் எனக்கு இந்த சிறு படைப்பை மின் அஞ்சலில் அனுப்பினார்.நான் இதனால் கவரப்பட்டேன், காரணம் என்ன என்றால்  இது வெறும் பதினேழு பக்கங்களை மட்டுமே கொண்டது, ஆங்கிலத்தில் இருந்தாலும் அனைவர்க்கும் புரியும் விதமாக உள்ளது . இதனை இறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க்' ஐ கிளிக் செய்யவும்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...